மே.பாளையம், ஜூலை 13- ஊருக்குள் உலா வரும் அரிய வகை ராஜ நாகங்களால் மரணம் நிச்சயம் என்ற அச்சத்தின் பிடி யில் மலையடிவார கிராம மக்கள் வசித்து வருகின்றனர். ஆசியாவில் வாழும் பாம்பு களில் அதிக விஷத்தன்மை கொண்டது ராஜ நாகம். 18 முதல் 22 அடி நீளம் வரை இருக்கும் ராஜ நாகங்கள் மனிதர்களை தாக்கும் போது தரையில் இருந்து ஆறடி வரை எழும்பி படமெடுக்கும். இது ஒருவரை கடித்தால் அதிகபட்சம் மூன்று நிமிடங்களுக்குள் மரணம் நிச்சயம். யானையைக் கடித்தால் அது இருபது நிமிடத்தில் கொல் லும் கடுமையான விஷத்தன்மை கொண்டது ராஜ நாகங்கள். பாம் புகளில் ராஜ நாகங்கள் மட்டுமே பிற வகை பாம்புகளைக் கொன்று உண்ணும் வழக்கமுடையது. மேலும் உலகில் உள்ள பாம்பு இனங்களில் ராஜ நாகம் மட்டுமே பறவைகளைப்போல கூடு கட்டி, அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடையது. பிற பாம்புகளை விட விஷத் தன்மை மட்டுமின்றி, பார்வை திறனும் இவற்றிற்கு மிக அதிகம். இவை இந்தியா, வியட்நாம், மலேசியா, தென் சீனா போன்ற தெற்கு ஆசிய பகுதிகளிலும், வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும் காணப்படுகிறது. மிக மிக அரிதாகவே மனிதர்களின் கண் களுக்கு தட்டுப்படும் இவ்வகை ராஜ நாகங்கள் தமிழகத்தில் சதுர கிரி மலை, ராஜபாளையம், நாகர்கோவில் மற்றும் அடர்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைக்காடு களில் காணப்படுகின்றன. சீரான தட்பவெப்ப நிலை நிலவும் நீரா தாரங்கள் உள்ள பசுமையான இலையுதிர் காடுகளில் வாழும் இவை, மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பெரும்பாலும் வரவே வராது.
ஆனால் தற்போது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் உள்ள கல்லாறு, நெல்லித் துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி போன்ற மலையடிவார கிராமங் களில் அடிக்கடி இந்த அரிய வகை ராஜ நாகங்கள் தென்படுகின்றன. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் ஊருக்குள் உள்ள ஓடைகள் மற்றும் கால்வாய்களில் சுற்றி வருகின்றன. குறிப்பாக எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும் பாக்கு தோப்புகளில் அடிக்கடி காணப்படுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மட்டும் ஆறு ராஜ நாகங் கள் வனத்துறையினரால் பிடிக் கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக் குள் கொண்டு சென்று விடப்பட் டுள்ளன. இவை அனைத்தும் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தவையாகும். ஊருக்குள் நுழையும் நாகப்பாம்பு, மலைப் பாம்பு என வேறு வகை பாம்புகள் பல பிடிபட்டாலும் இவ்வளவு ராஜ நாகங்கள் இப்பகுதியில் காணப்படுவதும், பிடிபடுவதும் வனத்துறையினரையும், வன உயிரின ஆர்வலர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கல்லாறு பகுதியில் ஒரு பெண் ராஜநாகம் பிடிபட்ட நிலையில் மேலும் சில ராஜ நாகங்கள் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடித் தால் ஒருசில நிமிடங்களில் மர ணம் நிச்சயம் என்ற அபாயத்து டன், பகல் நேரங்களில் கூட ராஜ நாகங்கள் தென்படுவதால் கலக் கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் தென்னை, வாழை, கரும்பு, பாக்கு போன்ற விவசாயமே முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ள நிலையில் தங்களது தோட்டங் களில் அன்றாட பணிகளைதத் தொடரவோ, இருள் சூழ்ந்த பின், வெளியில் நடமாடவோ இயலாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர். மூர்க்கத்தனமான குணம் கொண்ட ராஜ நாகங்கள் மனி தர்களைக் கண்டால் மட்டும் விலகி செல்லவே முயலும், தன் உயிருக்கு ஆபத்து எனக் கருதி னால் மட்டுமே மனிதர்களை தாக்கும் குணமுடையது எனக் கூறும் சூழலியல் ஆர்வலர்கள், அபூர்வ வகை ராஜ நாகங்களின் வனம் சார்ந்த வாழ்வியல் சூழல் மாசுபட்டு உள்ளதையும், இவற் றின் வாழ்விடம் அழிக்கப்பட்டு காட்டின் இயற்கையான நீரா தாரங்கள் பாழ்பட்டு போன தையே ஊருக்குள் இவற்றின் நடமாட்டம் உறுதிபடுத்துவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளை யம் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அருகில் உள்ள மலைக்காட்டில் இருந்து இரை தேடியும், இணை தேடியும் ராஜ நாகங்கள் வருகின்றன. இவற் றைக் கண்டவுடன் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் போது உட னடியாகப் பாம்பு பிடிக்கும் வல் லுனர்கள் உதவியுடன் அவை பிடிக்கப்பட்டு அடர்ந்த காடுக ளுக்குள் விடப்பட்டு வருகின்றன. அதிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகங்களைக் கண்டால் அவற்றை விரட்டவோ, துன்புறுத் தவோ முற்படுவது மிக மிக ஆபத் தானது. வனத்துறைக்கு தகவல் கொடுத்தால் அவற்றை பாதுகாப் பாய் பிடித்து சென்று விடுவோம். மேலும், ராஜ நாகங்கள் இங்கு அதிகம் வருவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்” என்றனர். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், மேட்டுப் பாளையம் பகுதி கிராம மக்களோ பாம்புகளின் அரசன் என வர்ணிக் கப்படும் ராஜ நாகங்களின் தொடர் வருகையால் நடுக்கத்தின் உச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.