tamilnadu

சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் மழை

கோவை, ஜூன் 11- கோவை மாநகரின் குடிநீர் தேவைக்கு 10க்கும் மேற்பட்ட கூட்டுக் குடி நீர் திட்டங்கள் இருந்தா லும், சிறுவாணி குடிநீரே பிரதானமாக இருந்து வரு கிறது.  இந்நிலையில் கோடை காலம் தொடங்கி யது முதல் சிறுவாணி  அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்தது. இதனால் மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்திற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டா யம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் தற்போது வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் விநி யோகத்தில் தடை இருக் காது என எதிர்பார்க்கப்படு கிறது.