tamilnadu

img

சமூகவிரோதிகளின் புகழிடமாக மாறிய காவலர் குடியிருப்புகள்

பொள்ளாச்சி ,மார்ச். 2- பொள்ளாச்சியிலுள்ள பழுதடைந்த  காவ லர் குடியிருப்புகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அர சுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி நக ராட்சியின் மையப்பகுதியில் காவலர்  குடியிருப்பு வாரியம் அமைந்துள்ளது.  இதில்  252 வீடுகளில் காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதியிலுள்ள காவல் நிலை யங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உதவிஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இங்கு வசித்து வந்த நிலையில், பெரும்பா லான கட்டிடங்களில் விரிசல் ஏற்ப்பட்டு இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில்  கோவை மாவட்ட காவல் துறை நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழைய காவலர் குடியிருப்புகளை காலிசெய்ய வாய்மொழி உத்தரவு பிறப் பித்தாக கூறப்படுகிறது. இதனால் இங்கிருந்த காவலர் குடும்பங்கள் வெவ் வேறு இடங்களுக்கு சென்று விட்டநிலையில், காலி செய்யாமல் சிலர் வசித்து வருகின்றனர்.  இந்த கட்டிடங்களை இடித்து புதிய  கட்டிடங்கள் கட்டவோ அல்லது பராம ரிக்கவோ எந்த நடவடிக்கையும் அரசு  தரப் பில் இன்றளவும் எடுக்கவில்லை.  இதனால்  தற்போது இந்த பகுதி முழுவதும் முட் புதர்களால் சூழ்ந்து வனப்பகுதியை  போல் காட்சியளிக்கிறது.  இந்நிலையில், சமூக விரோதிகளின் பிடி யில் காவலர் குடியிருப்பு தற்போது மாறி யுள்ளது. இப்பகுதியில் சமூகவிரோதிகள் சிலர்  ஆட்கள் இல்லாத குடியிருப்புகளை மது அருந்தவும், சமூக விரோத செயல்கள்  ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். எனவே, இந்த பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்களை கட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், காவலர்களின் குடும்பத்தி னரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர்.