ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
ஈரோடு, அக். 28- புன்செய் புளியம்பட்டியில் விடி யல் சமூகநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 8 ஆம் ஆண்டு புத்தக திருவிழாவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளி யம்பட்டியில் இளைய தலைமுறையி னரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கு விக்க ஆண்டுதோறும் விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் புத்தக திரு விழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 8 ஆவது ஆண்டாக புத்தக திருவிழா அக்.16 முதல் 20ஆம் தேதி வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் முன்னணி பதிப் பகங்கள் மற்றும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தது.
கண்காட்சியில் புத்த கங்களுக்கு 10 சதவிகித சிறப்பு தள்ளு படி வழங்கப்பட்டது. அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.சி. நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ப்ரிங் டல் பப்ளிக் பள்ளி, சாணக்யா இண் டர்நேஷனல் ஸ்கூல், சிந்தாமணி வித்யாலயா பள்ளி, கோடேபாளை யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட ஏராள மான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை ஆர்வ முடன் வாங்கிச் சென்றனர். இதில் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது என விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி னார். மேலும், ஒவ்வொரு நாளும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், இயற்கை சித்த மருத்துவர் கு.சிவராமன், எழுத்தாளர் கள் பவா செல்லத்துரை, ஈரோடு கதிர், திரைப்பட இயக்குனர் வசந்த் ஆகியோர் பங்கேற்று உரையாற்றி னர்.