உடுமலை, செப். 10- உடுமலை பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள ஏழு குளங்களி லும், இந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் நீர் வழி தடங்களில் ஆக்கிர மிப்பு உள்ளதாகப் பல ஆண்டுகள் புகார் வந்த நிலையில், தற்போது நீதி மன்றம் நீர் வழி ஆக்கிரப்பை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை அமல் படுத்தும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளார்கள். இதன் ஒரு பகுதியாக உடுமலை வட்டம், தென்பூதிநத்தம் கிராமத் தில் அம்மாபட்டி குளத்தில் கரை பகு தியில் சில விவசாயிகளும், ஒரு சில இடங்களில் பொது மக்களும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதை பொதுப்பணித்துறை, வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரி கள் ஆய்வு செய்து, ஆக்கிரப்புகளை அகற்றும் நடவடிக்கையாக எச் சரிக்கை செய்தார்கள். பின்னர், பள்ளாபளையம் ஊராட் சிக்கு அருகில் மேல திட்டு பகுதியின் வழியாக செங்குளத்திற்கு தண்ணீர் வரும் நீர் வழி தடத்தில் 18 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளதை அகற்ற சென்றபோது, உள்ளூர் கோவில் திருவிழா நடை பெற்று வருவதால் ஆக்கிரப்புகளை அகற்றாமல், திருவிழா முடிந்த பின்னர் அகற்ற நடவடிக்க எடுக் கலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆக்கிரப்பு அகற்றும் நடவ டிக்கை குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, இப்பகுதியின் நீர் நிலைகளான குளங்களில் பல ஏக் கர் நிலங்களை வசதி படைத்தவர் கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார் கள். அவற்றை மீட்டு குளத்தின் கரை யாக மாற்ற வேண்டும். குளத்தின் கரை பகுதிகளில் பனை மரம் உள்ளிட்ட பழமையான நாட்டு மரங்களை நட வேண்டும். மீண்டும் ஆக்கிரப்பு ஏற்படாத வகை யில், தொடர் கண்காணிப்பை அதி காரிகள் செய்ய வேண்டும். குளங்க ளுக்குத் தண்ணீர் வரும் வழி தடங்கள் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவதால், சாக் கடை நீர் உள்ளிட்ட கழிவு நீர் சேரும் பகுதியாக மாறுகிறது. இவற்றை சரி செய்து, நீர் ஆதாரமாக இயற்கை யாக கிடைத்த குளங்களைப் பாது காக்க வேண்டும் என்றனர்.