நாமக்கல், ஜூன் 25- சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்ப நாயக்கன்பட்டி கொல்லிமலை சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம் காளப்பநாயக்கன்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்க வில்லை. இதனால், அரங்கசிவன்குன்று, விநாயகர்கோவில், சுப்பிரமணியன் நகர் பகுதிகளில் வசித்து வரும் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடி நீரின்றி அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆவேசமடைந்த நூற் றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், சேந்த மங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப் பதாக ஒப்புதல் அளித்த பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.