tamilnadu

img

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

கோவை, நவ.13–  கோவை மாநகராட்சியின் குறைதீர் கூட்டம் புதனன்று நடைபெற்றது.  கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக புதனன்று குறைதீர்வு கூட்டம் மாநகராட்சி ஆணையர் சரவண்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  100 வார்டுகளில் இருந்து 74 மனுக்கள் பெறப்பட்டது. அந்தந்த துறை அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையர் உத்தரவிட்டார். இதில், மின்  கம்பம் பழுது,  சாலையோர விளக்குகள் சரிசெய் வது, பாதாள சாக்கடை பணிகளை உடனே மூடு வது, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. இதில், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில் குமார் ரத்தினம், மகேஷ் கனகராஜ், அண்ணாதுரை, மோகனசுந்தரி, ரவிச்சந்திரன், சசி பிரியா, பார்வதி உட்பட அதிகாரிகள், அனைத்து மண்டல நக ரமைப்பு அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலு வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.