tamilnadu

img

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

இளம்பிள்ளை, நவ.27- குடிநீர் வழங்கக்கோரி இடங்க ணசாலை பேரூராட்சி அலுவலகம் முன்பு செவ்வாயன்று பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர்.   சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே உள்ள இடங்கண சாலை பேரூராட்சி 2-வது வார்டு தூதனூர் பழனி ஆண்டவர் கோயில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. இப்பகு தியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பேரூ ராட்சி நிர்வாகம் சார்பி சில ஆண்டு களுக்கு முன்பு 800 அடி ஆழத் தில் ஆழ்துளை கிணறு அமைக்கப் பட்டது.  ஆனால் இந்த ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் விநியோ கிக்கப்படவில்லை. பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்குமாறு கோரிக்கை விடுத்துவந்தனர்.ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி அப்ப குதி மக்கள் உண்ணாவிரதப் போரா ட்டம் நடத்துவதற்கு மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் அனுமதி கோரி னர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து  இடங்க ணசாலை பேரூராட்சி அலுவலகம் முன்னதாக 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், ஆழ்துளை குழாயை ஆய்வு செய்து சரி செய்து கொடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார். ஆனால் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே நாங்கள் இந்த போராட்டத்தை கைவிடு வோம் என தெரிவித்தனர்.  இதற்கிடையே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது இடங்கணசாலை பேரூ ராட்சி அலுவலகத்தில் சேலம் பேரூ ராட்சி உதவி இயக்குனர் முருகன் இருந்தார். ஆனால் பொதுமக்க ளிடம் எந்தவொரு பேச்சுவார்த் தையும் நடத்தாமல் அங்கிருந்து கிளம்பி செல்ல முயற்சித்தார், இத னால் ஆவேசமடைந்த பொது மக்கள் அவரது வாகனத்தை வழிம றித்து அமர்ந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவரது வாகனம் விடு விக்கப்பட்டது.  முன்னதாக, இப்போராட் டத்தில் கலந்து கொண்ட நபர்கள் கூறுகையில், தண்ணீருக்காக உண் ணாவிரதம் இருக்க மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் மூன்று நாட் களுக்கு முன்பே அனுமதி கேட்டி ருந்தோம். ஆனால் திங்களன்று இரவு அனுமதி மறுக்கப்பட்ட நிலை யில்,  இரவு 11 மணிக்கு மகுடஞ் சாவடி காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ் செந்தில்குமார் வீடு, வீடாக சென்று பொதுமக்கள் யாரும் இந்தப் போராட்டத்திற்கு வரக் கூடாது. மீறி வந்தால் வழக்குப் பதிவு செய்து உங்களை கைது செய் வோம் என மிரட்டினார்.  ஆனால் எங் கள் அடிப்படைத் தேவையான குடிநீ ருக்காக நியாயமான முறையில் போராட்டம் நடத்தினால் கூட காவ ல்துறை எங்களை ஒடுக்க நினைக்கி றார்கள்  என வேதனையோடு தெரி வித்தார்.