உடுமலை, ஜீலை 1- பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை தாலுகா, கணக்கம் பாளையம் ஊராட்சியில் முப்பாதா யிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதிக்கு திரு மூர்த்தி அணையில் இருந்து கணக் கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத் தின் கீழ் தினமும் 14 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் முறை யாக தினமும் குடிநீர் வழங்க முடியும். ஆனால் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் வழங்கப் படுகிறது.இதுதொடர்பாக அதி காரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திங்களன்று கணக் கம்பாளையம் ஊராட்சி மன்ற அலு வலகத்தின் முன்பு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்திற்கு கணக்கம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார், செயலாளர் இராசேந்திரன், பொருளாளர் தம்பு ராஜ் உள்ளிட்ட திரளான பொதுமக் கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.