tamilnadu

img

சாக்கடை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல், ஆக.25-      சாக்கடை கால்வாய் இல்லாததால், கிராமத்தில் மையப்பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.  திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம்,  அகரம் கிராமம் செக்காங்காடு  பகுதியில் 50க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் விவசாய கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.    எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு அமர்ந்திருக்கும் இப்பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாக்கடை கழிவுநீர் மற்றும் மழை  காலங்களில் மழை நீர் வெளியேற முடியாமல் ஊரின் மையப்  பகுதியான மாரியம்மன் கோவில் முன்பு தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்திடம், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித் தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்குவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உரு வாகி உள்ளது. ஆகவே உடனடியாக சாக்கடை கால் வாய்கள் அமைத்து மழைநீர் வெளியே செல்ல உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.