tamilnadu

img

காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற நிவாரணம் தருக

உடுமலை, ஆக. 22- உடுமலை பகுதியில் காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற விவசாயிகளுக்கு நிவாரணம் தர  வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவ சாயம்  செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் கணிசமான வருமா னத்தை பெற்று வந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை இல்லாத நிலையில், தண் ணீரை விலைக்கு வாங்கி ஊற்ற முடியாததால் தென்னை மரங்கள் காய்ந்து போனது. இதனால் விவ சாய நிலங்களில் காய்ந்த மரங் கள் மட்டுமே காணப்படுகிறது. இதனை முழுமையாக அகற்ற ஏக்கர் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டியதாகி யுள்ளது. இதன்காரணமாக இப்பகுதியில் பல இடங்களில் விவ சாய நிலங்களில் தென்னை மரங் கள் அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறு கையில், பருவ மழை இன்றி காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற பல ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுகி றது. முன்பு செங்கல் சூளை உரிமை யாளர்கள் காய்ந்து போன மரங் களை எடுத்து சென்றார்கள். ஆனால் பல புதிய தொழில் நுட்பங் கள் செங்கல் சூளைக்கு வந்ததால் தென்னை மரங்களை எடுக்க யாரும் வருவது இல்லை. இதனால் எங்க ளால் காய்ந்த போன மரங்களை அகற்ற முடியாமல், அந்நிலங்களில் விவசாயம் எதுவும் செய்யா முடியா மல் இருக்கிறோம். ஆகவே தமிழக அரசு காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற எங்களுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.