tamilnadu

img

வறட்சியால் காய்ந்த மரம், பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக

தருமபுரி, அக்.8- பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வறட்சியால் காய்ந்துபோன மரம் மற்றும் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அப் பகுதி விவசாயிகள் தமிழக  அரசை வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி வட்டம்,  பாப்பி ரெட்டிப்பட்டி வட்டத்தில் தென்னை, பாக்கு, மா, சப் போட்டா, கொய்யா, வாழை உள்ளிட்ட மரங்கள் வறட்சியால் காய்ந்துபோயின. அதேபோன்று நெல்,  கேழ்வரகு, பூவகைகள், மஞ்சள், கரும்பு, மர வள்ளிக்கிழங்கு, நிலக்கடலை ஆகிய பயிர் களும் கடும் வறட்சியால் காய்ந்துபோயின. இப்பகுதி விவசாயிகள் மரம் மற்றும் பயிர்களுக்கு ஓரியண்டல் இன்சூரன்சில் காப்பீடு செய்தனர். ஆனால் வறட்சி பாதித்த  பயிர்களை கணக்கிட யாரும் வரவில்லை.மேலும் பல விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்ததால் சிரமத்தில் உள்ளனர். குறிப்பாக கரும்பு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் செலவு செய்துள்ளனர். ஆனால் வறட்சியினால் கரும்பு காய்ந்து போனதால் கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டது. இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடி யாத நிலையில் உள்ளனர். எனவே வறட்சி பாதித்த விவசாயிகளை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க மாவட்ட  நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை  எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள் ளனர்.