tamilnadu

img

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குக

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.30- விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழி தலைமையில் நடை பெற்றது.  இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க  பிரதிநிதிகள் பேசுகையில், தருமபுரி  மாவட்டத்தில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மூலம் நடவுமானியம், நெல்விதை மானியம்  வழங்க வேண்டும். மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகமாக இருப்பதால் கால் நடை மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும். கேசர்குழி வலது, இடதுபுறக் கால்வாய்களை தூர்வாரவேண்டும். விவசாய இலவச மின் இணைப்பு கேட்டு  1992-ம் ஆண்டுமுதல் சிறு,குறு விவ சாயிகள் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு இலவச மின்இணைப்பு கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றின்  உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரி களில் நீர்நிரப்பும் திட்ட பணிகளை துவக்க  வேண்டும் என வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,   ஒகேனக்கல் உபரி நீரை  மாவட்டத்தில்  உள்ள அனைத்து ஏரிகளில்  நிரப்பப்படும்.  இதற்காக ரூ.350 கோடி  மதிப்பிலான  திட்டத்தை  நடைமுறைப் படுத்துவதில்  உள்ள இடர்ப்பாடுகள் களை யப்பட்டு அடுத்த நிதியாண்டில் நடை முறைப்படுத்தப்படும். நெல்லுக்கு காப்பீடு செய்வது  தொடர்பாக   நெல் 2-க்கு நவ.30 ஆம் தேதியன்று முடிவடைந்தாலும்,  நெல்-3-க்கு  பிப்ரவரி மாதம்  வரை கால  நீடிப்பு  செய்யப்பட்டுள்ளது. எனவே  விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு  செய்து பயனடையுமாறு  கேட்டுக்கொள் ளப்பட்டது.   பார்ம் ரோஸ் புல்  பயிர் செய்த  விவசாயிகள் ஆண்டுதோறும் கடும் நஷ்ட மடைகின்றனர். இதனால் விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து  தொழிற் சாலை மூலம் வாசனை திரவியம்  தயாரிக் கப்படும். இதனை சந்தை படுத்தி விற்பனை  செய்து விவசாயிகள் அதிக லாபம் பெற வேளாண் வணிகத்துறை மூலம் திட்டங்கள் தயார் செய்து அரசுக்கு  பரிந்துரை செய்யப் படும் எனத் தெரிவித்தார்.  மேலும் கரும்பு சாகுபடி விவசாயிக்கு வங்கி கடன் நிலுவையாக இருந்தாலும் மீள கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். விவசாயிகளின் நில பட்டாக் களில்  ஆன்லைனில் பதிவு செய்யும்போது  ஏற்படும்  தவறுகளை  களைய  அந்தந்த பகுதி களில்  குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப் பட்டு குறைபாடுகள் களைந்து நடவடிக்கை எடுக்கப்படும். கேசர்குளி அணை வலது, இடது புற கால்வாய் தூர்வார  ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது  என கூறினார்.  இக்கூட்டத்தில் சார் ஆட்சியர்   பிரதாப், வேளாண்மை இணை இயக்குநர்(பொ.) சிவ  சங்கர் சிங், வேளாண்மை துணை இயக்குநர்  (உழவர் பயிற்சி நிலையம்) வி. இராஜதுரை,  வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்)  முகமது அஸ்லம், தோட்டக்கலை துணை இயக்குநர் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும்  தலைவர் (பொ) முனைவர் வெண்ணிலா, வேளாண்மை துறை மற்றும் அதன் சகோத ரத் துறை அலுவலர்களும், தருமபுரி மாவட்ட  அனைத்து வட்டாட்சியர்கள்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மனுக்கள் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.