tamilnadu

img

மாற்று இடத்துடன் கூடிய பட்டா வழங்குக

விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜன. 13 -  சித்தோடு பேரூராட்சி பகுதியில் நெடுஞ்சாலை ஓடை புறம்போக்கில் வசிப்போருக்கு மாற்று இடத்துடன் கூடிய பட்டா வழங்க கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங் கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.  இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர். விஜயராகவன் கூறுகை யில், ஈரோடு மாவட்டம் சித்தோடு பேரூராட்சி பழைய தேசிய நெடுஞ் சாலை ஓடைக்காடு பகுதியில், 33  தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தி னர் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். விவசாய கூலி வேலை செய்து வரும் இவர்கள், அப்பகுதியில் குடிசை அமைத்து வசிக்கின்றனர். இத னிடையே ஆக்கிரமிப்புக்களை அகற் றும் நோக்கில், இவ்விடத்தில் உள்ள  வீடுகளை அகற்ற பல முறை அதிகாரி கள் இயந்திரங்களுடன் வந்துள்ளனர். இருந்தும் தற்போது அவகாசம் கேட்டு, வசித்து வருகின்றனர்.  ஆகவே, இவர்களுக்கு நிரந்தர மாக பட்டா வழங்கி, மாற்று இடத்தில் வீடு கட்டிக் கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் இவர்க ளுக்கு மாற்று இடம் வழங்கும் வரை,  தற்போது வசிக்கும் இடத்தில் அவர் கள் தொடர்ந்து வசிக்க வாய்ப்பு வழங்க  வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.

;