tamilnadu

img

உடுமலை நகராட்சியில் நிலவும் ஊழலை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம்

உடுமலை, ஜூலை 26- உடுமலை நகராட்சியில் நிலவும் ஊழல்,  நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. உடுமலை நகராட்சியில் பிறப்பு, இறப்பு  சான்று விண்ணப்பம் பெற இடைத் தரகர்கள் மூலம் பணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும். தெருவிளக்குகளை முறை யாக பராமரிக்க வேண்டும்.  நகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ், பார்க் சைட் ஆகிய இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க  வேண்டும்.  பசுபதி வீதி, ஒன்றிய அலுவலகம்  பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.  சொத்துவரி, பில்டிங் பிளான் அப்ரூவல் வழங்குவதில் ஆளுங் கட்சி பிரமுகரின் தலையீட்டை தடுக்க வேண்டும்.  பாதாள சாக்கடை அடைப்பால் தேங்கிநிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து,  குடிநீர்  வரியை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வெள்ளியன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு தொடர்  முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இந்த தொடர் முழக்கப் போராட்டத் திற்கு உடுமலை நகரச் செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், சி.சுப்பிரமணியம் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரக்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, சுதா சுப்பிரமணியம், செல்லத்துரை, தோழன்ராஜா, வசந்தி, மாலினி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.