போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தருமபுரி, அக்.18- போக்குவரத்து கழகங்களை பாது காக்கக்கோரி அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, சேலம் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழக வழித்தடங் களில் தனியார் பேருந்துகளை இயக் கக்கூடாது. மின்சார பேருந்து என்ற பெயரால் போக்குவரத்துக் கழகங் களை சீர்குலைக்கும் மத்திய அரசின் சதிக்கு துணை போகக்கூடாது. அரசே நிதி உதவிசெய்து பேருந்துகளை இயக்கவேண்டும்.ஓட்டுனர்,நடத் துனர் மற்றும் தொழில்நுட்ப பணி யாளர் பணிகளை தனியாருக்கு வழங் கக்கூடாது என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, சேலம் போக்கு வரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு எல்பிஎப் மண்டலத் தலைவர் ஏ.சின்னசாமி தலைமை வகித்தார். மண்டல பொதுச்செய லாளர் பி.கிருஷ்ணன் வரவேற்றார். எல்பிஎப் மாநில பிரச்சார செயலாளர் தனசேகரன், சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன், டிடிஎஸ்எப் மாநில பொதுச்செயலாளர் டி.வி. பத்மநாபன், ஏஐடியுசி மண்டல பொதுச்செயலாளர் டி.சுப்பிரமணி, ஐஎன்டியுசி மண்டலத் தலைவர் தங்க வேல், எச்எம்எஸ் மண்டல பொரு ளாளர் சுந்தரராஜன், எல்பிஎப் கோட்டத் தலைவர் மணி, ஏஏஎல் எல்எப் மண்டல பொதுச்செயலாளர் எம்.பொன்னுசாமி, சிஐடியு மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம் மண்டல செயலாளர் சி.முரளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். எல்பிஎப் பிரச்சார செயலாளர் ஏ.வாசு நன்றி கூறினார்.
சேலம்
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு பொதுச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.செம்பன், பொருளாளர் எம்.சேகர், ஏஐடியுசி மாநில சம்மேளன செயலாளர் என்.முருகராஜ், டிடிஎஸ்எப் மாநில துணைத் தலைவர் வி.மனோகரன், எச்எம்எஸ் பொதுச்செயலாளர் எஸ்.தங்கவேல், எம்எல்எப் பொதுச் செயலாளர் வீ.கருப்பண்ணன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். எல்பிஎப் பொருளாளர் டி.எஸ்.பால கிருஷ்ணன் நன்றி கூறினார்.