tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக

கோவை, ஜூன் 11– ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி  செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப் பினர் மனு அளித்தனர்.  கோவை மாவட்டத்தில் பத்தா யிரத்திற்கும் அதிகமான ஆட்டோக் கள் இயங்கி வருகிறது. இத்தொ ழிலை நம்பி 15 ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். நாள் தோறும் உயரும் பெட்ரோல், டீசல் விலை யால் ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கி வருகிறது. அவர்களாகவே ஒரு கட்டணத்தை நிர்ணயித்து வாகனத்தை இயக்குவதால் சாதா ரண ஆட்டோ தொழிலாளி வாடகை இல்லாமல் பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். மேலும், பல ஆண்டு காலமாக தொழிற்சங்கம் அமைத்தும், ஸ்டேன்டுகள் அமைத்து வரிசையாக எவ்வித இடையூறும் இல்லாமல் ஆயிரக் கணக்கானோர் ஆட்டோவை இயக்கி வாழ்வை நகர்த்தி வருகின் றனர். 

இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் எந்த தொழிற்சங்கத்தை யும் சாராத பலர் போலியாக ஆட் டோக்களின் மேற்கூரையில் போலி யாக மீட்டர் கட்டணம் என்கிற வாசகத்தை பயன்படுத்தி பயணி களை ஏமாற்றி வருகின்றனர். இதனால் பல இடங்களில் ஆட்டோ ஓட்டுனர்களுக்குள் மோதல் ஏற் படும் சூழல் உருவாகியுள்ளது. இது போன்று ஆட்டோ தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தைச் சூறையா டும் நபர்களைக் கண்டறிந்து நடவ டிக்கை எடுக்கவும், போலியாக  மேற்கூரையில் வைக்கப்பட்டுள்ள பலகையை அப்புறப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.  மேலும், இருசக்கர வாகனங்க ளில் வாடகைக்குப் பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பறி முதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர்  பி.கே.சுகுமாறன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு வில் தெரிவித்துள்ளனர். இதில் சிஐ டியு ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் செல்வம், எல்பிஎப் வணங்காமுடி, ஏஐடியுசி கார்த்திக், டிஎம்டிகே அந்தோணி உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற் றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் வந்திருந்தனர்.