தருமபுரி, ஜூலை 24- தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனு தாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 2019 மாதத்தின் நான்காம் வாரத் திற்குரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற ஜூலை 27 ஆம் தேதியன்று காரிமங்கலம் ஒன்றியத்தில், திப்பம்பட்டி கூட்டுரோட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாமில், செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள காலணி தயாரிக்கும் நிறுவனம் தங்களது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிளைக்கு தேவையான ஆட்களை மொரப்பூர், காரிமங்கலம், தரு மபுரி ஒன்றியங்களிலுள்ள வன்னியகுளம், அரியகுளம், நாயக்கன்கொட்டாய், ஏர்சீகரஅள்ளி, கும்பரஅள்ளி, இன்டமங்களம், பாப்பாரப்பட்டி, திண்டல், கொல்லப்பட்டி, இருமத்தூர், வகுரப்பம்பட்டி, திப்பம்பட்டி, வகுத்துப்பட்டி, கம்பைநல்லூர், நவலை, கோல்லப்பட்டி, ஈச்சம்பாடி, கெலவள்ளி, கெரகோடஅள்ளி, கொங்காரப்பட்டி, பந்தாரஅள்ளி ஆகிய 21 கிராமங்களிலிருந்து தேர்வு செய்ய உள்ளனர். எனவே, மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் உரிய சான்றிதழ்களுடன் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. ஆகவே, நடைபெறவுள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.