சேலம், ஜூலை 1- சேலம் சரக காவல் துறை துணைத் தலை வராக பதவி வகித்து வந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர காவல் ஆணையராக மாற் றப்பட்டார். இந்நிலை யில் சேலம் சரக காவல் துறை துணை தலைவ ராக மதுரையில் பணியாற்றி வந்த பிரதீப் குமார் திங்களன்று சேலம் சரக காவல்துறை துணை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்தும், மலர் கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.