tamilnadu

img

பொள்ளாச்சி அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சி, நவ.22- பொள்ளாச்சி அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குடோனுக்கு  சீல் வைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கூட்செட் சாலையில் தனியார் குடோனில் குட்கா பதுக் கிவைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாது காப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இத னையடுத்து பொள்ளாச்சி கூட் செட் சாலையிலுள்ள தனி யாருக்கு சொந்தமான குடோனில் வெள்ளியன்று உணவு பாதுகாப்பு துறை  கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில்  அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1 டன் அளவி ளான தடை செய்யப்பட்ட  குட்கா உள்ளிட்ட புகை யிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதனையடுத்து குடோனில் பதுக்கி வைத்தி ருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்ததோடு,  குடோனுக்கு சீல் வைத்தனர்.   இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட   விசாரணையில்  குடோனின் உரிமையாளர் சாதிக் என்பது தெரியவந்தது. அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறிய தாவது, கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக  நடத்திய ஆய்வில் சுமார் 3 டன் அளவுக்கு குட்கா உள் ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். மேலும்  போதை வஸ்துக்கள் பதுக்கி வைத்திருந்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற தடை செய்யபட்ட போதை பொருட்களை  பதுக்கி வைத் திருப்பது குறித்து   பொதுமக்களுக்கு தெரியவந்தால்,  உடன டியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு தகவல்  தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.