கோவை, மார்ச் 19- கோவையில் முககவசங்கள் தயாரிக்கும் இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவன உரி மையாளருக்கு காவல்துறை டிஐஜி தரப்பில் இருந்து மிரட்டல் வருவ தாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் நிறு வன உரிமையாளர் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதி யில் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை மகாலிங்கம் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முக கவசங்கள் தயா ரிக்கும் இயந்திரங்களை விற்பனை செய்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக முக கவசங்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதனை தயாரிக்கும் இயந்திரங்க ளின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீ சாஸ்தா இன்ஜி னியரிங் நிறுவனத்திடம் கியூ & கியூ என்ற நிறுவனத்தினர் முக கவசங் கள் தயாரிக்கும் இயந்திரம் வேண்டி அணுகியுள்ளனர். இதன்பின்னர், சென்னையை சேர்ந்த காவல்துறை டிஐஜி (சுதா கர்) மற்றும் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் மூலம் மிரட்டி மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கு வதற்கு முன்பாக முன்கூட்டியே ஒரு இயந்திரத்தை கியூ & கியூ நிறுவ னத்தினர் பெற்றுள்ளனர். மேலும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு அவ்வியந்திரத்தை வழங்கக் கூடாது எனவும், தங்களுக்கு மட் டுமே வழங்க வேண்டும் எனவும் டிஐஜி உள்ளிட்ட காவல் துறை அதி காரிகள் மூலம் மிரட்டி வருவதாக கூறி அந்நிறுவன உரிமையாளர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.