tamilnadu

img

கலாவதியாகும் முன்பே தெருவில் வீசப்பட்ட மருந்து பொருட்கள்

தாராபுரம், ஜுன் 17 - தாராபுரம் அருகே அரசு மருத்துவமனைகளுக்கு சொந்த மான மருந்துகள் கலாவதியாகும் முன்பே குப்பையில் கொட்டப் பட்டது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் அடுத்த அலங்கியம் ஆற்றுப்பாலம் அருகே பழைய நீரேற்று நிலையம் அமைந்துள் ளது. இதையொட்டியுள்ள சுடு காட்டின் சுற்றுச்சுவர் அருகில் அரசு மருத்துவமனைக்கு சொந்த மான மருந்துகள் ஏராளமானவை கொட்டப்பட்டிருந்தது. இதைய றிந்த அப்பகுதி மக்கள் அந்த  மருந்துகளை எடுத்துப் பார்த்த போது, வயிற்றுப் போக்குக்கு வழங்கப்படும் ஓரக்ஸ் என்ற கரைசல் பாக்கெட் மற்றும் கர்ப் பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரைகள், காயத்திற்கு வழங்கப்படும் மாத்திரைகள், வயிற்றில் உள்ள பூச்சிகளுக்கான நிவாரண மாத்திரைகள் ஆகி யவை இருந்தன. இந்த மருந்துக ளும் காலாவதியாகும் தேதிக்கும் முன்பே வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.   அரசு மருந்துகள் ஒருவேளை கலாவதியாகும் பட்சத்தில் அதை உயரதிகாரிகளின் அனுமதி பெற்றுத்தான் அப்புறப்படுத்த வேண்டும். அதுவும், இத்தகைய மருத்துவ கழிவுகள் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே அப்புறப்படுத்த வேண்டும் என் பதே நடைமுறையாகும். ஆனால், அதற்கு மாறாக மிகவும் அலட்சிய மான முறையில் குடியிருப்பு பகுதி யின் அருகே வீசப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, மக்களுக்கு வழங்கவேண்டிய மருந்துகளை வழங்காமல் கணக்கு காட்டிவிட்டு குப்பையில் கொட்டப்பட்டதா என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தவறுதலாக மருத்துவ கழிவுகளை எடுத்து சாப்பிட்டால் உடல்நலக்குறைவு மற்றும் உயிருக்கே ஆபத்து ஏற்ப டும் அபாயம் உள்ளது. இதே போல், மேய்யச்சலுக்கு செல்லும்  கால்நடைகள் உண்டாலும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆகவே, மருந்துகள் சுடு காட்டு பகுதியில் கொட்டப்பட் டுள்ளது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதற்கிடையே, இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறையி னர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த மருந்து கள் சேகரிக்கப்பட்டு அலங்கியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாராபுரம் துணை ஆட்சி யர் மற்றும் மருத்துவ இணை இயக்குநர் முறையான விசா ரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.