நாமக்கல், செப்.16- புதுச்சத்திரம் ஒன்றியம் தாத்தை யங்கார்பட்டி ஊராட்சியில் மண் சாலையை தார் சாலையாக அமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணியங்காடு அருந்ததி யர் தெருவில் 60க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள புதுச்சத்திரம் முதல் சிங்களாந்தபுரம் வரை செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் ஒரு கிலோமீட்டர் சாலையானது மண் சாலையாக உள்ளது. இதனை தார் சாலை யாக மாற்றிட ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்திடம் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் தார்சாலை அமைக்கும் பணிகளை மேற் கொண்டது. இப்பணிகள் துவங்கும்போது சாலையின் அருகிலுள்ள தனிநபர் ஒருவர் அவ்விடம் பட்டா நிலத்தில் வருவதாக கூறி தார்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் தார் சாலை அமைக் கும் பணிகள் தடைபட்டுள்ளது. ஆகவே, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுமூக பேச்சுவார்த்தை நடத்தி மண் சாலையாக உள்ள இப்பகுதிக்கு தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திங்க ளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர்.