ஈரோடு, நவ. 30- அவல்பூந்துறையில் பாவடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து சொந்தம் கொண் டாடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலையிடக்கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இதுதொடர்பாக ஏ.கே.ஜெகநாதன் தலைமையில் அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் அளித்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது, அவல்பூந்துறையில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பாவ டியாக செயல்பட்ட இடத்தை 20 ஆண்டு களாக பயன்படுத்தாமல் இருந்தோம். இத னால் அங்கு இருந்து வந்த பேருந்து நிறுத்தம் உபயோகத்துக்கு இல்லாமல் போனது. தற்போது மக்கள் தொகை அதிக ரிப்பு, போக்குவரத்து வசதிக்காக, அதே பகுதியில் மீண்டும் பேருந்து நிறுத் தம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.அதற்கான பணிகளும் மேற்கொள் ளப்படுகிறது. ஆனால், சில சமூக விரோத சக்திகள், அரசு பணியை தடுத்து நிறுத்தும் வகையில், அந்நிலத்தை பேரூராட்சி நிலவகையாக மாற்றம் செய்து இடையூறு செய்து வரு கின்றனர். குறிப்பாக, அவ்விடம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி, வேலையை நிறுத்தியதுடன், தகறாறு செய்து வருகின்றனர்.இதை மாவட்ட நிர் வாகம் தடுத்து நிறுத்தி, பாவடிக்கு சொந்த மான இடத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.மேலும், அவ்விடத்தில் நிழற் குடை, பொது சுகாதார வளாகம், சாலை விரிவாக்கப்பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள் ளனர்.