கோவை, ஜூலை 2- பராமரிப்பின்றி உள்ள பழங்கால குகை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் கலை இலக்கிய பெருமன்றத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் குமிட்டிபதி, பொன்பரப்பி, வேட்டைக்காரன் மலை போன்ற பகுதிகளில் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவை தற் போது உரிய பராமரிப்பின்றி உள்ளது. குகைகளைப் பார் வையிடச் செல்லும் சிலர் மது அருந்திவிட்டு, ஓவியங்களை சேதப்படுத்தி வருகின்றனர். இது குறித்து தொல்லியல் துறைக்கு புகார் அளித்தால் போதிய நிதி இல்லாததால் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆகவே நமது பண்பாட்டு ஆதாரங்களை பாதுகாக்க உரிய நிதியை ஒதுக்கி விலை மதிப்பற்ற பழங்கால ஓவியங்களை காக்க கம்பி வேலிகள் அமைத்தும், சிசிடிவி மற்றும் பாதுகாவலர்கள் மூலம் கண் காணிக்க வேண்டும் என இடதுசாரி எழுத்தாளர் சி.ஆர்.ரவிந் திரன் இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் ப.பா.ரமணி, ராஜன், புருசோத்தமன் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.