கோவை நல்லாம்பாளையம் விஜயாநகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை வடக்கு நகரக்குழு சார்பில் கோவை மாநகராட்சி துணை ஆணையரிடம் புதனன்று மனு அளிக்கப்பட்டது. இதனை வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் நிசார் அகமது, விவேகானந்தன், பாலு, விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.