கோவை, டிச.18 கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதனன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டமானது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளரிடம், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 40க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாந கராட்சி துணை ஆணையாளர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்த ரவிட்டார். இக்கூட்டத்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.