tamilnadu

img

கேஎஸ்கே படிப்பகத்தில் பெற்றோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருப்பூர், செப். 15 – திருப்பூர் பத்மாவதிபுரம் கேஎஸ்கே படிப்பகத்தில் மாலை நேர வகுப்பில் படிக்கும் குழந்தை களின் பெற்றோருக்கான கலந்து ரையாடல் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பத்மா வதிபுரம் கிளைச் செயலாளர் த.காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் பங்கேற்று “கல்வியும், சமூகமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கூட்டு உழைப்பில்தான் சமூகம் இயங்குகிறது. கூட்டு உழைப்பை யும், மனிதநேயத்தையும் கற்றுத் தருவதாக கல்வி அமைய வேண்டும் என்று முத்துக்கண்ணன் பேசுகை யில் குறிப்பிட்டார். முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் வாழ்த்தி பேசினார். அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த கௌரிசங்கர் துளிர் மாத இதழ் பற்றி அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாலை நேர வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவி களுடன், அவர்களது பெற்றோர்கள் சுமார் 20 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் மாலை நேர வகுப்பில் குழந்தைகளின் முன்னேற்றம் பற்றி பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டனர்.  கடந்த 2018 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் பத்மாவதி புரம் கிளை சார்பில் தொடங்கப் பட்ட மாலை நேர இலவச வகுப்பில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமு டன் கலந்து கொண்டு வருகின்ற னர். இரண்டாவது ஆண்டாக தற்போது இந்த இலவச மாலை நேர வகுப்பு நடைபெற்று வருகி றது.