tamilnadu

img

மோடி அரசின் வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, செப். 26- மத்திய அரசின் வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து,  பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயத் துறையை சீரழிக்கும் வகையில் மத்திய மோடி அரசு வேளாண் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகி றது. இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17  இயக்கம், விடு தலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பி னர் கலந்து கொண்டு மத்திய அரசின் விவசாய விரோத நட வடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி வித்து சனியன்று பெரியாரிய  உணர்வாளர்கள் கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், பெரியா ரிய உணர்வாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.