ஈரோடு, ஜூன் 17- குடியிருப்பு பகுதி அருகே தொழிற்சாலை அமைக்க அனுமதிக்கக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பாலக் காட்டு பகுதியில் சூரியம்பாளையம் கிராமம், சூரம்பட்டி, டீச்சர்ஸ் காலனி, அவ்வையார் வீதி பகுதியில் உள்ள இடத்தை தொழிற்சாலை உபயோக பகுதியாக மாற்றக் கோரி விண்ணப்பித்துள்ளதாக பொது அறிவிப்பு வெளியி டப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நிலமானது குடியிருப்பு பகுதியாக வும், வீட்டுமனைகளாகவும், மக்கள் அங்கிருந்து வசிக்கும் பகுதியாகவும் இருந்து வருகிறது. ஏற்கனவே மாசு ஏற்ப டுத்தும் தோல் ஆலைகளும், சாய சலவை ஆலை களால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர் களுக்கும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகி றது. சுவாசிக்கும் காற்றும், நிலத்தடி நீரும் இந்த ஆலைக ளால் மிகவும் மாசடைந்துள்ளது. இந்த ஆலைகளால் அப்பகுதிகளில் தோல் நோய், ஆஸ்துமா, அலர்ஜி, கேன்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எக்காரணத்தைக் கொண்டும் தொழிற் சாலை உபயோக பகுதியாக மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.