tamilnadu

img

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு

அன்னூர், ஆக.4- அன்னூர் அடுத்த சிவதங்கம் நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியரி டம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றி யம், சிவ தங்கம் நகர், தெலுங்குபாளை யம், கணேசபுரம் பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, சிவ தங்கம் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை கட்டப்பட்டு வருகிறது. ஆக.5 அம் தேதி யன்று திறக்க உள்ளதாக தெரிகிறது. இத னால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடையை அமைக்க இருப்பதை நிறுத்தம் செய்ய வேண்டும் என அம்மனு வில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வட் டாட்சியர்,  உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என தெரிவித்த்தை அடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.

;