திருப்பூர், ஆக. 30 - பெண்களை இழிவுபடுத்தி வக்கி ரத்தை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் ரங்கநாதபுரத்தில் வெள்ளி யன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாதர் சங்க வேலம்பாளையம் நகரப் பொருளாளர் குணசுந்தரி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட் டப்பொருளாளர் ஷகிலா, வேலம் பாளையம் நகரச் செயலாளர் ஆர்.கவிதா, தலைவர் பி.செல்வி உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டு குருமூர்த்தியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.