tamilnadu

img

பாசனத்திற்காக அமராவதி அணை திறப்பு

உடுமலை, ஆக. 11- உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத் திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கி ருந்து ஏராளமான குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்  படுகின்றன. இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை  போதிய அளவு பெய்யாததால் அணையில் இருந்து பாச னத்திற்கு தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாக இருந்தது. கடந்த 5 ஆம் தேதி அணையின் நீர்மட்டம்  மொத்தக் கொள்ளளவான 90 அடியில் 40.45 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 49 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மேற்கு தொடர்ச்சி  மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்தது. இதனால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தலையாறு, வாகுவாரை, மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழைபெய்து வருகிறது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஞாயிறன்று காலை அணையின் நீர்மட்டம் 73.76 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 3,023 கன அடியாகவும் இருந்தது.  இவ்வாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து புதிய ஆயக்கட்டு விவசாயிகள் பயன் பெறும் வகையில் பிரதான கால் வாயில் இன்று முதல் 15 நாட்களுக்கு 570 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசு உத்திர வின்படி,  பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள  25, 250 ஏக்கர் விளை  நிலங்கள் பாசன வசதி பெறும்.