tamilnadu

img

கோவை காந்திபுரத்தில் இரண்டடுக்கு பாலம் திறப்பு

காணொளி காட்சியின் வழியாக முதல்வர் திறந்துவைத்தார்

கோவை, ஜன. 29-  கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி காணொளி காட்சி மூலம் புத னன்று திறந்து வைத்தார். கோவையின் பிரதானப் பகுதி யான காந்திபுரம் பகுதியில் மேம் பாலப் பணிகள் 2014ம் ஆண்டு துவங் கப்பட்டது. இதில் காந்திபுரம் பார்க்கேட் முதல் டெக்ஸ்டூல் வரை யிலான நான்கு வழிச்சாலை மேம்பா லம் ரூ. 120 கோடி மதிப்பில் 2017ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதனை 2017 நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி நேரில் வந்து திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த மேம்பாலத்துடன் காந்திபு ரம், திருவள்ளுவர் பேருந்து நிலை யம் பகுதியில் ரவுண்டானா அமைத்தி ருந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும் என வாகன ஓட்டி கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த னர். ஆனால் இதுகுறித்து எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனைத்தொடர்ந்து , 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான 1.75 கிலோ மீட்டர்  தொலைவில் ரூ. 75 கோடி மதிப்பில்  இரண்டாம் அடுக்கு பாலம்அமைக் கும் பணிகள் கடந்த 2017 மார்ச்  மாதம்  துவங்கப்பட்டு தற்போது  பணிகள் முழுவதும் நிறைவடைந்துள் ளது. இதனை புதனன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி கோவையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாகன  போக்குவரத்தைக் கொடி அசைத்து  துவக்கி வைத்தார். இந்நிகழ்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விண்வெளி பாலத்தில் சிக்கிய பேருந்து

இந்த இரண்ட டுக்கு மிக உயர மான பாலத்தை விண்வெளிக்கு செல்லும் பாலம்  என்றெல்லாம் சமூ கவலைத்தளத்தில் விமர்சித்திருந்தனர். இதில் இருசக்கர வாகனம் மற்றும் கார், டெம்போ மட்டும் செல்லும் வகையில் குறு கலான பாலமாக உள்ளது. இதில் பேருந்துகள், லாரி கள் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் துவக்க நிகழ்ச்சிக்காக அரசு பேருந்து ஒன்றை பாலத் தின் முன்பு நிறுத்தி அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாலத்தின் மேலே ஏறிய வாகனம் திரும்பி வருகை யில் வெளியே வரமுடியாமல் விழாவிற்காக கட்டப்பட்ட பேன ரின் காரணமாக சிக்கிக்கொண் டது. இதனையடுத்து அவசர அவசரமாக பேனரை அகற்றி பேருந்து வெளியே வர வழி அமைத்துக்கொடுத்தனர். விண் வெளிக்கு சென்ற பேருந்து திரும்பி வர வழியில்லாமல் சிக்கிக்கொண்டது என தற்போது சமூக வலைத்தள வாசிகள் விமர் சித்து வருகின்றனர்.