திருப்பூர், ஜூலை 29 – இந்தியாவின் கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 எதிர்த்து திருப்பூரில் நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மங்கலம் சாலை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இம்மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மா.நாட்ராயன் தலைமை யில் நடைபெற்ற இம்மாநாட்டில் கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகி பி.ஆர்.நடராஜன் வர வேற்றார். இம்மாநாட்டு தீர்மா னத்தை ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க செயலாளர் ச.செல்லதுரை முன்மொழிந்தார். அப்போது கூறியதாவது: மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019ல், 3 வயது குழந்தையை பள்ளிக் கல்விக்குள் கொண்டு வந்து மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது. 5 முதல் 10 மைல் சுற்றளவில் பள்ளித் தொகுதி களை உருவாக்கி சமூக செயற் பாட்டாளர்களை அனுமதிப்ப தாக சொல்வது ஆசிரியர் சுதந்தி ரத்தைப் பறிப்பதை ஏற்க முடி யாது. 9 முதல் 12 வகுப்புகளுக்கு பருவத் தேர்வுகள், உயர் கல்வி கற்க தேசிய திறனறிவு தேர்வு என்பது தகுதி, திறமை என்று சொல்லி சமூகரீதியாக ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக குழந்தைகளை பள்ளிக் கல்வி யைத் தாண்டவிடாமல் தடுக்கும் படுபிற்போக்கான இந்துத்துவ கல்வித் திட்டமாகும். தொன்மை, பழமை, கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் இந்துத்துவ காவிமய கொள்கை குருகுலம், பாடசாலா மற்றும் மதரஸா போன்ற மதமயக் கல்வித் திட் டத்தை புகுத்தி தேசிய வாதத்தை உருவாக்கி கூட்டாட்சி சிந்த னையை சிதறடிப்பதாக உள் ளது. தனியார் கல்விநிறுவனங்கள் விருப்பம் போல் கட்டணம் நிர் ணயித்துக் கொள்ளலாம் என தனியார்மயத்தை அனுமதிக்கி றது. 200 அந்நிய நாட்டு பல் கலைக்கழகங்களை இந்தியா விற்குள் அனுமதித்து கார்ப்பரேட் மயமாக்கும் கொள்கையாக இருக்கிறது.
நீட், எக்ஸிட் தேர்வு கள் மூலம் ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கல்வியை தடை செய்வது போல் தேசிய திறனறி தேர்வுகள் நடத்துவது ஏற்க முடி யாது. தேசிய கல்வி ஆணையம், உயர்கல்வி ஆணையம், ராஷ்டி ரிய சிக்ஷா ஆயோக் என அனைத் தும் மத்திய அரசின் ஏகபோக மாக்கப்பட்டு மாநில உரிமை களைப் பின்னுக்குத் தள்ளுவ தாக உள்ளது. அறிவியல் மனப் பான்மை, சமூக நீதி, மதச்சார் பின்மை, இந்திய பன்முகத் தன்மை, பெண் கல்வி, மாற்றுத் திறனாளி மற்றும் பழங்குடி மக்களின் கல்வி குறித்து உரிய அழுத்தம் இல்லாமல் உள்ளது. எனவே இக்கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண் டும் என்று இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. த.பெ.தி.க சார்பில் ச.சி.தினேசு இந்த தீர்மா னத்தை வழிமொழிய, மாநாட்டில் திரண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து பலத்த கரவொலி எழுப்பி தீர்மா னத்தை நிறைவேற்றினர். இதில் தி.க. ஆறுமுகம், திவிக முகில் ராசு, மதிமுக வழக்கறிஞர் அணி ஈ.என்.கந்தசாமி, எஸ்எப்ஐ சம்சீர் அகமது, தாய்த்தமிழ்ப் பள்ளி கு.ந.தங்கராசு, ஏஐஒய்எப் மோகனபாரதி, பதியம் பாரதி வாசன், அறிவியல் இயக்கம் கரு ணாகரன் உள்ளிட்ட அமைப்பி னர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் முதன்மையாக கோவை நிமிர்வு கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வர லாற்று ஆய்வாளர் செந்தலை ந.கவுதமன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். நிறைவாக தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் நன்றி கூறினார்.