tamilnadu

img

தென்னை மறுநடவு மற்றும் புத்துயிரூட்டுதல் திட்டத்தில் அதிகாரிகள் முறைகேடு ?

உடுமலை, ஜூன் 11- தென்னை மறுநடவு மற்றும் புத்துயிரூட்டுதல் திட்டம் உள் ளிட்ட வேளாண்துறையில் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண் டிய பணப்பலன்களில் பெரும் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ள தாக குடிமங்கல் பகுதி விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன. திருப்பூர் மாவட்டம், குடிமங்க லம் ஒன்றியத்தில் லட்சக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் சாகு படி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயி கள் மற்றும் விவசாய தொழிலா ளர்கள் தென்னை தொழிலில்  ஈடு பட்டு வருகின்றனர். கடந்த இரண் டாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வறட்சியால் அதிக அளவு தென்னை மரங்கள் காய்ந் தும் மற்றும் காய்ப்பு திறனை இழந்தும் போனது. இதனால் கடு மையான பாதிப்பு அடைந்த  விவ சாயிகளை பாதுகாக்கும் வகை யில் தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தமிழக அரசு  ஏற்று நிவா ரணம் அறிவித்தது. இதன்படி நோயால் காய்ந்து போன தென்னை மரங்களை அப் புறப்படுத்த விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு முதல் தவணையாக ரூ.32 ஆயிரமும்,   இரண்டாம் தவ ணையாக ரூ.8,750  வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.  இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பட்டியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் முறையாக கள ஆய்வு செய்யாமல் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கும் மற்றும் ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கி உள்ளதாக தெரிகிறது. இத னால் உண்மையாகப் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவார ணத் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அப்போதைய குடிமங்கலம் வேளாண்மை இயக்குநரிடம் முறையிட்டபோது உரியபதில ளிக்கவில்லை என்ற நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் மூலம் விவரங்கள் கோரியுள் ளனர்.

ஆனால், அதற்கும் உரிய பதிலளிக்கப்படவில்லை என்ற நிலையில், மேல் முறையீடு செய் தும் இதுவரை எந்த பதிலுயும் வேளாண்துறையால் தரப்பட வில்லை.  இதனால், இத்திட்டத்தில் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற் றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பும்  இதேபோல் பயிர் காப் பீட்டு திட்டத்தில் மோசடி நடை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் வேளாண்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இருப்பினும், இன்று வரை பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வில்லை.  இதற்கிடையே, முந்தைய வேளாண்மை இயக்குநர் ஓய்வு பெற்றுவிட்டு சென்ற நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளிடம் இப்பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் முறை யிட்டுள்ளனர். ஆனால், அவரும் முறையாக பதிலளிக்காமல் முந் தைய அதிகாரியிடமே தங்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கூறிய தாக விவசாயிகள் தரப்பில் தெரி விக்கின்றனர். மேலும், 2016 - 2017ஆம் ஆண்டு  பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏமாற்றப்பட்ட நிலை யில், தற்போது தென்னை மறுநடவு மற்றும் புத்துயிரூட்டுதல் திட்டத்தில் பாதிப்படைய வைத்த வேளாண் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், பாதிக்கப்பட்ட உண்மையான விவ சாயிகளை அடையாளம் கண்டு பயிர் காப்பீட்டு திட்டம், தென்னை மறுநடவு மற்றும் புத்துயிரூட்டுதல் திட்டத்தின் பலன்களை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ந.நி)