tamilnadu

img

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு

அவிநாசி, ஜூலை 9- அவிநாசி-மங்கலம் சாலையில் உள்ள நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்த மான இடத்தை தனி யார் ஆக்கிரமிப்பு செய்து  கம்பி வேலி அமைத்து துள்ளார். இதனை நெஞ் சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.    அவிநாசி - மங்கலம் சாலையில் தனியார் நிறு வனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத் தையொட்டி நெடுஞ் சாலைத்துறையின் இடம்  உள்ளது. இந்த இடத்தை  திங்களன்று இரவில் தனியார் நிறுவ னத்தினர் கம்பி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவ்விடத்தில் மின்  கம்பங்கள் மற்றும் புளியமரம் உள்ளிட் டவை உள்ளது.   இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சந்திர சேகரிடம் கேட்ட போது, நெடுஞ்சாலைச் துறைக்கு சொந்தமான இடத்தில் வேலி  அமைக்கப்பட்டது தொடர்பாக புகார் வந்துள்ளது.  மேலும் கள ஆய்வு மேற் கொண்டு, உண்மை தன்மை கண்டறிப் பட்டு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். எனவே காலதாமதம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.