tamilnadu

எதற்கும் குறைந்ததல்ல

+2 முடித்தபிறகு, ஆங்கிலம் அல்லது தமிழ் மொழிப்பாடங்கள் எடுப்பவர்களின் வருங்காலம் நிச்சயமாக கேள்விக்குறியாக இருந்துவிடாது. ஏராளமான வேலைவாய்ப்புகள் அவர்களுக்குக் காத்துக் கிடக்கின்றன.ஆங்கிலம் என்பது அந்நியம் என்ற கருத்து அப்பாடத்திலிருந்து பெரும்பாலானவர்களைத் தள்ளி நிறுத்திவிட்டது. அதில் அதிக மதிப்பெண்கள் வாங்குபவர்கள் புலமை பெற்றவர்கள் என்றெல்லாம் கருதிவிட முடியாது. எம்.இ., எம்.டெக் எல்லாம் படித்துவிட்டு அடிப்படை ஆங்கிலத்தில் திணறுவதைப் பார்க்கலாம். இதனால்தான் தனியாக மொழிப்பாடங்களில் பட்டப்படிப்பு வாங்குபவர்களுக்கென்று வாய்ப்புகள் இருந்து கொண்டேயுள்ளன.கணிதம் போன்ற பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூட ஆங்கிலத்தில் கேள்விகளை எதிர்கொள்கையில் மொழி அறிவுக்குறைவின் காரணமாக தவறுகளை இழைக்கிறார்கள். சிலரின் வேலைவாய்ப்புகளை தாமதமாக்கவும் இது செய்திருக்கிறது. டுயளவ ரெவ கடிரச (கடைசியில் உள்ளவரை விட்டுவிட்டு நான்காவது நபர்) என்பதைப் புரிந்து கொள்ளாததால் வேலை கிடைக்காமல் போனவர்கள் உண்டு. தமிழ் மொழிப்பாடத்தைப் பொறுத்தவரை, மாநில அரசுத் தேர்வுகளில் அதற்கு பெரும் மதிப்பு இருக்கிறது. குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் 200 கேள்விகளில் 100 கேள்விகள் என்று தனியாக ஒரு தாள் உள்ளது. தமிழ்ப் பட்டதாரிக்கு மிகப்பெரிய வாய்ப்பை இது தருகிறது. மொழிப் பாடங்களைப் பயில்பவர்கள் ஆசிரியப் பணிக்குத் தயாராகலாம். ஊடகத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. சரியான ஆங்கிலத்தை எழுதுபவர்கள்/பேசுபவர்கள் குறைந்து வருகையில் அந்த வாய்ப்புகளை ஆங்கிலப் பட்டதாரிகள் எடுத்துக் கொள்ளலாம். சுற்றுலாத்துறை, ஓட்டல் நிர்வாகம் போன்றவற்றிலும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.