tamilnadu

img

புத்தகங்களுடன் புத்தாண்டு நிகழ்ச்சி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

பொள்ளாச்சி, ஜன. 23- கல்வி உரிமைக்கானக் கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ”உலகை குலுக்கிய அறிவியல் அறிஞர்கள்” என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் வானவராயர் அரசுப்பள்ளி யில் புதனன்று புத்தகங்களுடன் புத்தாண்டு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சி  மாணவர்களின் கல்வி உரி மைக்கான கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் ஆயிஷா நடராஜன் எழுதிய ”உலகை குலுக் கிய அறிவியல் அறிஞர்கள்” என்ற புத்தகம்  பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட் டது.  முன்னதாக, இவ்விழாவிற்கு பெற்றோர்  ஆசிரியர் சங்கத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் முகமது கௌஸ்கான் வரவேற்று பேசினார். பேராசிரியர் சரோன் மற்றும்  பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்கேற்று புத்தக வாசிப்பின் அவசியம்  குறித்து மாண வர்களிடையே தன்னம்பிக்கை பற்றியும் சிறப்பித்து உரையாற்றினர். இதில் பொள்ளாச்சி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் நிர் வாகிகள் பிரகாஷ், மனோகரன், ராஜேஷ் மற்றும் அரசுப்பள்ளி  ஆசிரியர்கள்  உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இதேபோல் ஆனை மலை பெத்தநாயக்கனூர் அரசுப்பள்ளியி லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

;