tamilnadu

img

காவல்துறை ஆய்வாளர் பெயரை கூறி நூதன கொள்ளை

அவிநாசி, டிச.5- அவிநாசியில் ஜவுளிக் கடையில் காவல்துறை ஆய்வாளர் பெயரை கூறி ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ஆடைகளை நூதன முறை யில் கொள்ளையில் ஈடு பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜவுளிக்கடையில் புதனன்று  இளைஞர் ஒருவர்  ரூ.12 ஆயிரம் மதிப்பிலான துணிகளை எடுத்துள்ளார். இந்த நிலையில் இளைஞர் எடுத்த துணிகளுக்கு அவி நாசி காவல்துறை ஆய் வாளர் பணம் தருவார் எனக்  கூறியுள்ளார். அத்துடன்   இளைஞர்  கடையில் உள்ள ஊழியர் களை அனுப்பி வையுங்கள் காவல்துறை  ஆய்வாளரிடம்  பணம் வாங்கித் தருவ தாகவும் கூறியுள்ளார்.  இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் ஊழி யரை அனுப்பியுள்ளார்.  இதையடுத்து கடை ஊழியர் அவிநாசி காவல் நிலையத்தில் சென்று பார்க்கும்போது துணி எடுத்துச் சென்ற இளைஞர் அங்கு இல்லை.   இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் கடை உரிமை யாளர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கண் காணிப்பு கேமராவில் பதிவு செய்த இளைஞரின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

;