கோவை, டிச. 2- கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டல புதிய அலுவல கத்தை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செய லாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில், ரூ.7.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப் பட்ட அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலு மணி பேசுகையில்இப்புதிய அலு வலகத்தில் உதவி ஆணையாளர், மண்டலத் தலைவர், கூட்ட அரங்கு, உதவி நிர்வாகப் பொறி யாளர், உதவி நகரமைப்பு அலு வலர், நிர்வாக அலுவலர், மண்டல சுகாதார அலுவலர், உதவி வரு வாய் அலுவலர், இளம் பொறியா ளர் பிரிவு, மண்டல நில அளவை யர் அறை, தணிக்கைப் பிரிவு, வரி வசூல் பிரிவு, பொதுப் பிரிவு, பதிவறை, கணினி அறை, வரி வசூல் மையம் மற்றும் நவீன அடிப் படை வசதிகள் கொண்ட கழிப்பி டம் ஆகியவற்றுடன் பொதுமக் களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் பொதுமக் கள் அமர்ந்து வரிசெலுத்துவதற் கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அலு வலர்கள் பொதுமக்களின் கோரிக் கைகளை பரிசீலித்து தகுந்த நட வடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ள லூரில் தமிழக முதல்வரின் ஆணை யின்படி ரூ.168.00 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலை யம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளது. ரூ.395.41 கோடி மதிப்பில் குறிச்சி, குனிய முத்தூர், துடியலூர், வெள்ளக் கிணறு, சரவணம்பட்டி, காளப் பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங் குறிச்சி ஆகிய இடங்களில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடை பெற்று வருகிறது. ரூ.3.00 கோடி மதிப்பில் குனி யமுத்தூர் பகுதியில் சிறுவாணியி லிருந்து குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியும், ரூ.24.80 கோடி மதிப்பில் நொய்யல் ஆற் றின் குறுக்கே புதிய பாலம் மற் றும் புட்டுவிக்கி சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.11.80 கோடி மதிப்பில் புட்டுவிக்கி சாலை இணைப்பில் தடுப்புச்சுவர் மற்றும் தார்சாலை அமைக்கும் பணியும் முடிவுற்றுள்ளன. இதுபோன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, கருணை அடிப் படையில் வாரிசுதாரர்களுக்கான இளநிலை உதவியாளர் தட்டச்சர், அலுவலக உதவியாளர், துப்புர வுப் பணியாளர் பணியிடங்களுக் கான நியமன ஆணைகளை 37 பேருக்கு அமைச்சர் வழங்கினார்.