சேலம், ஆக. 28- அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில், சேலம் விஜயராகவாச் சாரியார் அரங்கத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு 2019 மீதான கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது, புதிய கல்விக் கொள்கை வரைவு, இந்தியாவில் கடும் போராட் டங்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்துள்ள கல்வித்துறையின் அடிப் படையையே தகர்த்து அனை வருக்கும் சமமான கல்வி வழங் கப்பட வேண்டும் என்ற கோட் பாட்டையே கேள்விக்குறியாக்கும். வணிக மய, தாராள மய இந்துத் துவ முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என்பதை அம்பலப் படுத்தி இந்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில இளைஞரணி செயலாளர் ஜங்சன் ஆ.அண்ணா துரை தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், கஸ்தூரிரங் கன் கல்விக் குழுவின் தேசிய கல்வி கொள்கை வரைவு-2019 அறிக்கை இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் அம்பேத்கர் உருவாக்கிய சமூக நீதிக்கு எதிராக உள்ளது என வும், சமூக ரீதியாகவும், பொருளா தார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியை, இந்த புதிய கல்விக் கொள்கை கேள்விக்குறி யாக்கும். தற்போது 5 வயதிலிருந்து முதல் வகுப்பில் பள்ளிக் கல்வி தொடங்குகிறது. இனிமேல் 3 வய தில் இருந்தே முறையான கல்வி தொடங்கப்படும். மேலும் 3,5,8 வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான தேர்வுகள் நடத்தப்படும். மற்றும் 9, 12 வகுப்பு வரை இடைநிலை கல்வியாக கருதப்பட்டு 8 பருவ தேர்வுகள் வரை தேர்வுகள் நடத்தப் படும் என மாநில தேர்வு வாரியமோ அல்லது தனியார் தேர்வு வாரிய மும் மாணவர்களை மதிப்பீடு செய்து சான்று தர வேண்டும் என்பதை பள்ளியில் முடிவு செய்துகொள்ள லாம் என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மாணவர் களின் கல்விக்கு எதிரானது என கருத்தரங்கில் விளக்கப்பட்டது. முன்னதாக இக்கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலை வர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் துணைப் பொது செய லாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி, தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக் கறிஞர் கூட்டமைப்பு இணைச் செயலாளர் இமயவரம்பன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கருத் துரை வழங்கினர்.