உதகை,பிப்.10- பந்தலூர் அருகே அரசுப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் திங்களன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள அம்மன் காவு அரசுப் பள்ளியில் திங்களன்று நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை கீதா சரஸ்வதி தலைமை வகித்தார். கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் அமீன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஸ்டாலின், அரசு பள்ளி ஆசிரியர்கள் சுஜித், சத்தியமூர்த்தி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் பாக்கியராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமி ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ரவி, சத்து ணவு அமைப்பாளர் யசோதரவாசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இந்த முகாமில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தை சீரமைத்தனர்.