tamilnadu

img

முள்ளி கொரை, தீட்டுக்கல்லில் தொடர் மின்தடை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு


உதகை, அக்.21- உதகை அருகில் உள்ள முள்ளி கொரை, தீட்டுக்கல் ஆகிய பகுதி யில் தொடர் மின்தடை ஏற்படுவ தால் அதனை சரி செய்ய வேண்டும்  என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உதகை அருகில் உள்ள முள்ளி கொரை, தீட்டுக்கல் ஆகிய பகுதிக ளில் 500க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். அப் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக மாதத்திற்கு 15 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மின் வாரிய அதிகாரிகளை சந்தித்து முறை யிட்டால் சாண்டிநல்லாவிலிருந்து வனப்பகுதியின் வழியாக மின் கம்பிகள் வருவதால் உடனடியாக பழுதுபார்க்க முடிவதில்லை என்று கூறுகின்றனர்.  மேலும், மழை பெய்தாலும், காற் றடித்தாலும் இரண்டு மூன்று நாட் களுக்கு மின்சாரம் தடைப்பட்டு இப்பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கிவிடும். இதனால் பள்ளி, கல் லூரிகளுக்கு செல்லும் மாணவர் கள் வீட்டு பாடம் எழுத முடியா மலும், தேர்வு காலங்களில் படிக்க  முடியாமலும் மிகவும் சிரமப்படு கிறார்கள். மேலும் சுகம், துக்க  நிகழ்வுகளின் போது மின்சாரம் இல்லாமல் பல்வேறு இன்னல் களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே  மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்கள் பகுதியை இந்த தொடர் மின்தடை துன்பத் திலிருந்து மீள்வதற்கு மாற்று ஏற்பாட்டை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று அப் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் நீலகிரி மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் எஸ்.நிர்மலாவிடம் மனு அளித்தனர்.