tamilnadu

img

சிறு,குறுந்தொழில்களை பாதுகாக்கக்கோரி தொடர் இயக்கம் சிஐடியு கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கோவை, ஆக.27 –  அதிகரித்து வரும் வேலையின்மை, பெரு  நிறுவனங்களின் ஆட்குறைப்பால் நெருக் கடி உருவாகியுள்ளது. ஆகவே, சிறு குறுந்தொழில்களை பாதுகாக்க அரசு தீவிர  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் இயக்கத்தை மேற்கொள்வது என சிஐடியு கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்திய தொழிற்சங்க மையத்தின்  (சிஐடியு) கோவை மாவட்ட 12 ஆவது மாநாடு துடியலூரில் எஸ்.ஜி.சுப்பையன் நினைவரங்கத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம் மாநாட்டில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப்பெற்று சுய வேலை  வாய்ப்பு தொழிலை பாதுகாக்க வேண்டும்.  குடிநீர் வடிகால் வாரியம் மறு சீரமைப்பு என்கிற பெயரில் வாரியத்தை முடக்கி  தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்தும், சுகாதார பணியாளர்களுக்கு சட்ட சமூக பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். கட்டு மான தொழிலை பாதுகாக்க வேண்டும். நலவாரியத்தில் உதவித்தொகைளை அதிகப்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும்,  குடிநீர் விநியோகத்தை சூயஸ்  நிறுவனத்திற்கு அளித்த கோவை மாநக ராட்சியின் நடவடிக்கையை கண்டித்தும், இந்த ஒப்பந்தத்தை திரும்பப்பெற வேண்டும். இதேபோல் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவ டிக்கையில் ஈடுபட்டு வருவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத னால் வாங்கும் சக்தி முடங்கி பொருளா தார தேக்கம் உருவாகியுள்ளது. இந் நிலையில் மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையின் காரண மாக பல்லாயிரக்கணக்கனோருக்கு வேலை வாய்ப்பு அளித்து வந்த சிறு,குறுந் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட் டுள்ளது. ஆகவே, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட சிறு,குறுந் தொழில்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் இயக்கம் மேற்கொள்வது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.       

புதிய நிர்வாகிகள் தேர்வு

முன்னதாக, இம்மாநாட்டை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி உரை யாற்றினர். இதனைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.  இதில் மாவட்ட தலைவ ராக சி.பத்மநாபன், செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக ஆர்.வேலுசாமி மற்றும் துணை தலைவர்களாக கே.மனோகரன், பி.சந்திரன், இ.என்.ராஜகோபால், வி.ஆண்டாள், ஏ.எம்.ரபீக்,  சி.லலிதாமணி, ஆர்.செல்வம், ஆர்.கேசவ மணி, எம்.வேளாங்கண்ணிராஜ், துணை செயலாளர்களாக என்.செல்வராஜ், ஆர்.பழனிச்சாமி, கே.ரத்தினகுமார், வி.மது சூதனன், ஏ.எல்.ராஜா, என்.ஈஸ்வரி, ஆர். ராஜன், எம்.பஞ்சலிங்கம், கே.ஆர்.ராஜேந் திரன், அழைப்பாளராக ப.காளியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார். முடிவில் வி.மதுசூதனன் நன்றி கூறினார்.