tamilnadu

img

அரூர் வனப்பகுதியில் புள்ளிமானை விழுங்கிய மலைப் பாம்பு

தருமபுரி, அக்.18- அரூர் வட்டம், அண்ணாலம்பட்டி வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இதேபோல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதி களில் மீட்கப்படும் மலைப் பாம்புகள் கொளகம் பட்டி, அண்ணாலம்பட்டி காப்புக் காடுகளில் விடப் படுகிறது. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்த புள்ளிமான் இரைதேடி வந்தபோது மலைப்பாம்பு பிடித்துள்ளது. இதனை வனப்பகுதியில் கால்நடைகள் மேய்க்க சென்றோர் கண்டு உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.