tamilnadu

img

சாலையோர பாறைக்குழியால் அச்சத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்

அவிநாசி, டிச. 9- அவிநாசி அருகே ஆலங்காட்டுபாளையத்தில் சாலையோரத்தில் பாதுகாப்பின்றி இருக்கும் பாறைக்குழியால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அவிநாசி ஒன்றியம், வேட்டுபாளையம் ஊரா ட்சிக்குட்பட்ட சுண்டக்கபாளையத்தில் இருந்து சேவூர் செல்லும் சாலையோரத்தில் ஆலங்காட்டு பாளையத்தில் பாறைக்குழி அமைந்துள்ளது. மிக குறுகலான சாலையில் இரண்டு சக்கரம், கனரக வாகனங்கள், மிதி வண்டியில் பயணம் செய்யும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோர் நாள்தோறும் சென்று வருகின்றனர். இச்சூழலில் தடுப்புச் சுவர் இல்லாத நிலையில் காணப்படும் இந்த பாறைக்குழியால் விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத் துடனேயே பயணம் செய்யும் நிலை உள்ளதால், அப்பகுதியில்பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.