கோவை, ஆக.6– மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற மத்திய பாஜக அரசை வலியுறுத்தி கோவையில் செவ்வாயன்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொது போக்குவரத்தை கார்ப்பரேட் டுகள் கபகளீரம் செய்ய மத்திய பாஜக அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இதன்காரணமாக காப்பீடு, உரிமம் புதுப்பித்தல் போன்ற வற்றிக்கான கட்டணங்கள் கடுமையாக உயரும். இதனால் அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைக்கும் தொழிலாளிகள் உள் ளிட்ட பொது போக்குவரத்தை நம்பி யுள்ளவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளா கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்து கோவை யில் அனைத்து ஆட்டோ தொழிற் சங்க கூட்டு கமிட்டியின் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு கமிட்டி தலை வரும், சிஐடியு ஆட்டோ சங்க பொதுச் செயலாளருமான பி.கே.சுகுமாரன் தலைமை தாங்கினார். செயலாளர் வணங்காமுடி, பொருளாளர் கார்த்தி கேயன் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் நாசகர சட்ட திருத்தத்தின் அபாயம் குறித்து சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆர்.செல்வம், பொருளாளர் சி.ராஜன், துணை பொதுச் செயலாளர் எம்.கே.முத்துக்குமார், எல் பிஎப் சார்பில் அருளானந்தம், சி.செல் வம், ஏஐடியுசி சார்பில் சிவசண்முகம், எம்எல்எப் ரங்கநாதன், ஷாஜகான், ரஜினி ஆட்டோ சங்கம் சார்பில் அஷ்ரப்பாஷா, தளபதி ஜேம்ஸ், எஸ்டிடியு கே.ஷாஜகான், எம்டிஎஸ் பயஸ்கான், எம்ஜேகே அக்கீம், எப்ஐடியு மோகன்ராஜ் ஆகியோர் கண் டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அர சின் தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து முழக்கங்களை எழுப் பினர்.