மேட்டுப்பாளையம், நவ.5- மேட்டுப்பாளையம் அருகே உள்ள காந்தையாற்று பாலம் மூழ்கிய நிலையில் ஆபத்தை தவிர்க்க அரசு சார்பில் மோட் டார் மூலம் இயங்கும் பைபர் படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட மலை யடிவார கிராமங்களான லிங்கா புரம் – காந்தவயல் இடையே காந்தையாறு என்னும் காட்டாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 2005 ஆம் ஆண்டு 20 அடி உயரத்தில் பாலம் கட்டப் பட்டது. பவானிசாகர் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள இவ்விடத்தில் சரியாக கணக்கி டாமல் காந்தையாற்றின் குறுக்கே இப்பாலம் கட்டியதால் ஆரம்பம் முதலே பிரச்சனை உரு வாக்கியது. பருவ மழைக்காலத் தில் பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியை எட்டும் போதே இந்த பாலம் மூழ்க துவங்கி விடும். அணை யின் நீர்மட்ட உயரம் 100 அடியை கடந்து விட்டால் இந்த உயர்மட்ட பாலம் முழுவதுமாக நீருக்குள் மூழ்கி விடுவதோடு இதன் இணைப்பு சாலைகளும் தண்ணீருக்கடியில் சென்று விடும். தற்போது அணையின் நீர் மட்டம் 105 அடியை நெருங்கு வதால் போக்குவரத்திற்கு இப்பா லத்தை மட்டுமே நம்பியுள்ள காந்தையூர், உளியூர், ஆளூர், காந்தவயல் கிராம மக்கள் சுமார் அரை மணிநேரம் காதையாற்றின் மீது பரிசலில் பயணித்தே கடந் தாக வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. இதில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் நிலை பரிதாபமானது. எவ்வித பாது காப்பு வசதிகளும் இன்றி சுமார் நாற்பதடி ஆழ காட்டாற்றை பரிசல் மூலம் கடந்து பள்ளி சென்று திரும்புகின்றனர். மேலும், மூங்கிலால் ஆன இந்த பரிசல்களில் பயணிக்கும் போது தண்ணீர் புகுந்து விடுவ தால் புத்தக பைகள் நனைந்து விடுவது, ஆற்றின் போக்கால் பள்ளி செல்ல தாமதமாவது என பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின் றன. உயிருக்கு உத்திரவாதமில் லாத இந்த பரிசல் பயணத்தை தொடர்வதை தவிர வேறு வழி யில்லை என்ற சூழலில், தாங்கள் ஆற்றை கடக்க பாதுகாப்பான பரிசல் படகுகள் வேண்டும், அனைவருக்கும் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, கோவை மாவட்ட நிர்வாக உத்திரவின் பேரில், பொள்ளாச்சி ஆழியார் அணையில் சுற்றுலா பயணிக ளுக்காக இயக்கப்பட்டு வந்த மோட்டார் மூலம் இயங்கும் பைபர் படகு செவ்வாயன்று லிங்கா புரம் பகுதிக்கு கொண்டு வரப்பட் டுள்ளது. நீச்சலில் அனுபவம் வாய்ந்தவர்களால் இயக்கப்படும் இந்த படகில் ஒரே நேரத்தில் 20 பேர் பயணிக்கலாம். மேலும் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் வழங்கப்படும். இதனால் ஆபத் தான பரிசல் பயணம் தவிர்க்கப் படும் என்பதோடு 24 மணிநேரமும் இயங்கும் இப்படகில் மாணவ மாணவியர் இலவசமாக பயணிக் கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. விரைவாகவும் பாதுக்காப்பா கவும் சென்று வர கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள இந்நடவ டிக்கையினை வரவேற்கும் இப் பகுதி மக்கள், நீர்வடிந்த பின்னர் மழைக்காலத்தில் மூழ்கி விடும் இப்பாலத்தை உயர்த்தி கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.