தாராபுரம், ஜூலை 6- தாராபுரத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து,தேசியகீதம் பாடப்படாமல் புறக்கணிக்கப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. தாராபுரம் அரிமா திருமண மண்டபத்தில் தாலுகா அளவி லான அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திட்ட இயக்குநர் ரமேஷ் குமார் வரவேற்றார். இதில் 194 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் காசோலை களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலை கவசம் அணிந்து செல்லவேண்டும். மேலும் இந்த ஆண்டு பேரூராட்சி பகுதிகளில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு 25 நாட்டுக்கோழி குஞ்சு களும், ஒன்றரை லட்சம் பயனாளி களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட் டுள்ளது என கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் பவன்குமார், நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட உதவி திட்ட இயக்குநர் சுதா நன்றி கூறினார். முன்னதாக இவ்விழா பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பயனாளிகள் காலை 9 மணிக்கே வந்து காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் 1 மணிக்குத்தான் வந்தார். அமைச்சர் வந்தவுடன் விழா நிகழ்ச்சி தமிழ்த்தாய் பாடப்படா மல் துவங்கியது. விழா முடிந்த பிறகு தேசியகீதமும் இசைக்கப் படாமல் அவசரகதியில் முடிக்கப் பட்டது.